இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதை குறித்து நாம் பேசவேண்டியது அவசியமான காரியம். நாம் நம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியின்கீழாயும், வழிகாட்டுதலின்படியாய் வாழ்வது மற்றொரு முறையாகும் . நாம் அதிகம் பேசுவதை தவிர்த்து செய்கையினால் நடக்கவேண்டுமென்று பவுலானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் பேசுகிறதான அளவையும், ஒழுக்கத்தை தீர்மானிப்பதிலும், நம் முடிவுகளின் எல்லாவற்றிலேயும் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தவேண்டும். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; ஆகிய இவைகளுக்கு சாட்சியாய் இருக்கவேண்டுமென்று கிறிஸ்துவுக்குள் வாழ்கிறதான பரிசுத்தவான்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் உரைக்கிறது என்னவென்றால் நாம் ஆவியில் நிறைந்து ஜீவிக்கவேண்டும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, பரிசுத்த ஆவியின் வரத்திற்க்காக உமக்கு நன்றி, அவர் எனக்குள் ஜீவிக்கிறபடியால் உம்முடைய நல்ல ஆவி நலமான பாதையிலே நடத்தி, வார்த்தையிலும், செய்கையிலும் இயேசு கிறிஸ்துவை போல என்னை வனைந்து கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து