இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு சிறந்த கிறிஸ்தவத் ஊழியரை உருவாக்குவது எது? இங்கே பரிசுத்த ஆவியானவர் மூன்று நற்பண்புகளை வலியுறுத்துகிறார்: 1.அவர்கள் தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு கற்பிக்கிறார்கள். 2. மற்றவர்களுக்கு மாதிரியாக வாழ்கிறார்கள் . 3. அவர்கள் அதிக விசுவாசம் கொண்டவர்கள். தேவன் நம் பிள்ளைகள், நண்பர்கள், உடன் வேலையாட்கள் , உறவினர்கள், அயலகத்தார், மற்றும் நமது சபையைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் ஆகிய நம் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தும்படி நமக்கு தனித்துவ தன்மையை அளிக்கிறார் . நாம் நம்மை எத்தகைய ஆவிக்குரிய தலைவர்களாக அவர்களுக்குக் காண்பிக்கிறோம் ?

என்னுடைய ஜெபம்

எல்லா கிருபையின் மற்றும் எல்லா இரக்கத்தின் தேவனே,, தயவுசெய்து என் செல்வாக்கு நிறைந்த உலகில் நீர் வைத்திருக்கும் மக்களுக்கு ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைவராக இருக்க பரிசுத்த ஆவியின் மூலம் எனக்கு அதிகாரம் கொடுங்கள். நான் பின்பற்றத் தகுந்த வாழ்க்கையை வாழ முற்படும்போது என்னை பெலப்படுத்துங்கள். இயேசுவின் அதிகாரத்திலும் அவருடைய வல்லமையிலும் நான் இதை ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து