இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வெவ்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவர்களை குறித்து நாம் கேள்விப்படும்போது , குறிப்பாக கடினமான சூழ்நிலைகளில் மற்றும் நேரங்களில் உள்ள விசுவாசிகளுக்காக அல்லது அவர்கள் புதிய கிறிஸ்தவர்களாக இயேசுவை விசுவாசிப்பவர்களாக இருப்பார்களானால், இந்த ஜெபத்தை நோக்கத்துடன் ஜெபிப்போம்! பவுலானவர் இங்கே, தான் சந்தித்திராத மக்களுக்காக ஜெபித்ததைப் போல, நம்முடைய ஜெபங்களும் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் . நாம் அவர்களுக்காக ஜெபிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியின் பெலத்தினாலும்,வழிநடத்துதலினாலும் , ​​அறிவு, ஞானம் மற்றும் புரிதல் ஆகியவற்றில் வளரும்படி புதிய வழிகளில் தேவனுடைய வல்லமையை அவர்களுடைய வாழ்க்கையில் கொண்டுவருகிறோம் .

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , உலகெங்கிலும் உள்ள என் சகோதர சகோதரிகளை கிறிஸ்துவுக்குள் ஆசீர்வதியுங்கள். தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் ஒடுக்குமுறையை எதிர்கொள்பவர்களையும் பெலப்படுத்துங்கள். உம்முடைய குடும்பத்தில் உள்ள புதிய கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் தேறினவர்களாக செய்யுங்கள். சந்தேகம் மற்றும் நிச்சயமற்ற நிலையில் உள்ள மக்களுக்கு தெளிந்த புத்தியை தாரும் . இன்று உம்முடைய ஜனங்களை பொறுமையினாலும் சமாதானத்தினாலும் ஆசீர்வதியுங்கள். இயேசுவின் நல்ல நாமத்தினாலே , நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து