இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறந்த ஈவுகளையும் நினைத்துப் பாருங்கள். இயேசுவுக்கு அடுத்தபடியாக, நம் இரட்சிப்புக்காக தேவனின் கிருபாதார பலி , நாம் பெறக்கூடிய மிகப்பெரிய ஈவு என்னவென்றால் , பரிசுத்த ஆவிக்குள்ளாய் தேவனின் நிலைத்திருக்கும் சமூகமே ! நாம் கேட்கும்பொழுது அவர் நம்முடையவர். உண்மையில், நாம் தேவனிடம் எதையும் கேட்கும்போது, ​​ஆவியானவர் ஏற்கனவே தேவ சமூகத்திலே நமக்காகப் பரிந்து பேசுகிறார்!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே, உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னையும், என் அன்புக்குரியவர்களையும், எங்கள் சபையையும் பலப்படுத்தும்படி, விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியின் மூலம் நான் உமக்கு முன்பாக வருகிறேன். உம் கிருபை , வல்லமை மற்றும் அன்பின் ஆவியால் வழிநடத்தப்படும் எங்கள் நாடு மற்றும் எங்கள் உலகம் முழுவதும் புதுப்பிக்க நான் ஜெபம் செய்கிறேன். இந்த மகத்தான பரிசை வழங்கிய இயேசுவின் நாமத்திலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து