இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாத்து, போஷித்து, ஊட்டமளித்து வாழ்க்கையின் சோதனைகளை எதிர்க்கொள்ள அவற்றை ஆயத்தப்படுத்துகிறான் , அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையானதை செய்யும்படி தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்குகிறான். 23 ஆம் சங்கீதம் நமக்கு நினைப்பூட்டுவது போல, இந்த உலகத்திலுள்ள எந்த மேய்ப்பனும் தனது ஆடுகளை அந்த மேலான மேய்ப்பனைப் போல, அதாவது, நம்முடைய பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரன் நம் மேய்ப்பனாக பூமிக்கு வந்து வழி நடத்தினது போல சிறப்பாக ஆயத்தப் படுத்துவதில்லை (யோவான் 10:10-18). கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் கர்த்தருடைய வல்லமையை வெளிக்கொண்டுவருவதற்கு , "உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் " அவர்களை திராணியுள்ளவர்களாகும்படி தேவனிடம் ஜெபிப்போம்!

என்னுடைய ஜெபம்

ஆடுகளின் சிறந்த மேய்ப்பரே, தயவு செய்து உம் மக்களிடம் உமது ஆவியின் வல்லமையை வெளிப்படுத்தி , முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தங்கள் நாளில் செய்தது போல், எங்கள் நாளில் பெரிய காரியங்களைச் செய்வதற்கு எங்களைத் தயார்படுத்துங்கள். மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்ய எங்களை ஆயத்தப்படுத்தி, பலப்படுத்துங்கள், நாங்கள் செய்யும் அனைத்தும் உமது மகிமைக்கும் மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்கும் செய்யப்பட வேண்டும். என் முன்னோடியாகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து