இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்னால் ஏதும் செய்யமுடியாது ஆயினும் இயேசுவின் சகோதரர் யாக்கோபு சொன்னதை என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை: "பிதாவாகிய தேவனுக்கு முன்பாக பரிசுத்தமான மார்க்கம் இதுதான்: தன்னைத் தீட்டுப்படுத்தாமல் காத்துக்கொண்டு , திக்கற்றவர்களையும் விதவைகளையும் அவர்களுடைய துன்பத்தில் கவனித்துக் கொள்ளுவது ". இதுவே பிதாவின் இருதயத்தின் வாஞ்சை என்பதை இயேசு தம் ஊழியத்தில் தெளிவாகக் காண்பித்தார் . இனி அதைத் தொடர்வது நம் கரங்களில் இருக்கிறது!

என்னுடைய ஜெபம்

பிதாவே , என் வாழ்வும், என் இரக்கமும், எனது ஊழியமும் உமது இருதயத்தைப் பிரதிபலித்து தேவையுள்ள மக்களுக்கு பராமரிப்பையும் , பாதுகாவலையும் , அன்பையும் காண்பிக்கட்டும் . இந்தத் தேவையை இன்னும் தெளிவாகப் பார்க்க என் கண்களை திறந்தருளும் , மேலும் அவர்களுக்கு பொறுமையாய் உத்தரவுக்கொடுக்க அப்படிப்பட்ட இருதயத்தைத் தாரும் , அதினால் உம்முடைய அன்பு என் மூலமாய் வெளிப்படும். இயேசுவின் விலையேறபெற்ற நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து