இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் நாடும் உங்கள் மக்களும் மெய்யான ஆவிக்குரிய மற்றும் நல்லொழுக்கமுள்ள எழுப்புதலை அனுபவிக்க வேண்டுமானால் எது முக்கியமானது ? முதலில், தேவனுடைய ஆவியானவரின் வல்லமையோடு நாம் நடக்க வேண்டும். இரண்டாவதாக, கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவும் அதற்குப் பதிலளிக்கவும் மக்கள் தங்கள் இருதயங்களைத் திறக்க வேண்டும். ஆகவே, உலகெங்கிலும் உள்ள நாம் அனைவரும் - பரிசுத்த ஆவியின் செயலுக்கும், "கர்த்தருடைய வார்த்தையின் " வல்லமைக்கும் தங்கள் இருதயங்களைத் திறப்பதற்காக - நாம் ஒன்றாக ஜெபிக்க உறுதி கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லவருமான தேவனே , தயவுசெய்து இந்நாட்களில் எழுப்புதலை கொண்டுவர முழு பெலத்தோடும் எங்களை நடத்தும் . உமது சத்தியத்திற்கு அனைத்து தேச மக்களின் இருதயங்களையும் திறந்தருளும் , இன்னுமாய் உம்முடைய சத்திய வார்த்தையைப் பிரகடனப்படுத்துபவர்கள் வல்லமையுடன் பேச பெலன் தந்தருளும் . மேலும், அன்புள்ள ஆண்டவரே, என்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர அடியேனை உபயோகித்தருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து