இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சபையிலே தொழுதுக்கொள்வது மாத்திரம் பூமியில் நம் வாழ்வின் குறிக்கோள் அல்ல. மிக முக்கியமான ஒன்றாக சேர்ந்து பொதுவாக ஜெபிப்பது மற்றும் தனிப்பட்ட முறையில் தேவனை துதிப்பது ஆகியவை நமது தொழுகைக்கான நமது இலக்கின் ஒரு பகுதி மட்டுமேயாகும் . நம் உதடுகளினால் , ஜீவியத்தினால் , இருதயத்தினால் மற்றும் நம்முடைய கரங்களினால் தேவனை மகிமைப்படுத்த பூமியில் அதற்காகவே நாம் இருக்கிறோம் . நம்மைச் சுற்றியுள்ள உலகம் சாத்தானின் வலையில் சிக்கியுள்ள நிலையில், சபையின் தனிப்பட்ட தொழுகையிலும் நாம் அவருடைய அழைப்பைக் கேட்டு, "இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் !" என்று அவருக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். (ரோமர் 12:1-2; எபிரேயர் 12:28-13:16).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , நான் பெற்ற அனுபவங்களை எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. என் தாயின் வயிற்றில் நீர் என்னை உருவாக்கின போது நீர் எனக்குள் வைத்த திறமைகளுக்காக உமக்கு நன்றி (சங்கீதம் 139:13-16). நான் உம் பிள்ளையாக மாறியபோது உமது ஆவியை எனக்குள் ஊற்றிய ஈவுக்காக நன்றி. இப்போதும் , ​​அன்பான பிதாவே , இந்த ஈவுகள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை உமது ராஜ்யத்திற்காகப் பயன்படுத்தவும், என்னைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிக்கவும் எனக்கு உதவியருளும் . மற்றவர்களை உம்மிடம் அழைத்து வரவும், கிறிஸ்துவின் சரீரத்தைக் (சபையை) கட்டியெழுப்பவும், தேவைப்படுபவர்களை ஆசீர்வதிக்க எனது ஈவுகளையும் திறமைகளையும் அவைகளுக்காக பயன்படுத்த விரும்புகிறேன். இவை அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் அதிகாரத்தினாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து