இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் அநேகர் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் - அவை சரீர பிரகாரமாகவோ மற்றும் பொருளாதார ரீதியாகவோ ஆசீர்வாதங்கள் இல்லவிட்டாலும் , நிச்சயமாகவே தேவனுடைய கிருபையினால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய எதிர்காலத்திற்கான அவருடைய வாக்குத்தத்தங்கள் நம் வாழ்க்கைக்கு இன்னும் அதிக அர்த்தத்தைத் கொடுக்கிறது. கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்! துதி ஸ்தோத்திரத்தினாலும் , நகைப்பினாலும் ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்து அவரை கனம் பண்ணுவோமாக !

என்னுடைய ஜெபம்

இரக்கமும் , மனஉருக்கமும்,கிருபையும் நிறைந்த பிதாவே , நீர் என்னை ஆசீர்வதித்த அநேக வழிகளுக்காக உமக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன் . உம் குமாரனாகிய இயேசுவின் மூலமாய் நீர் பாராட்டின உம் இரட்சிப்பின் ஈவு எண்ணி முடியாதது மற்றும் அவை என்னுடைய எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எனக்கு அளிக்கிறது. நீர் என்னுடன் பகிர்ந்து கொண்ட ஆவிக்குரிய மற்றும் உலகத்துக்குரிய ஆசீர்வாதங்கள் யாவும் எனக்கு அல்ல ,உமக்கே மகிமையையும் கனத்தையும் கொண்டுவரட்டும், இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து