இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கோடான கோடி நட்சத்திரங்களைக் கொண்ட நமது பிரபஞ்சத்தின் மகத்தான பரப்பில், இந்த சின்னஞ்சிறிய பூமியில் , எண்ணற்ற பரந்து விரிந்த விஸ்தாரமான கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மணல் துகளாக இருக்கும் இடத்தில், தேவன் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார் . அத்தகைய அறிவு மெய்யாக இருப்பதினால் அவைகள் மிகவும் அற்புதமானது, ஆமாம் அது உண்மைதான் ! அவர் நம்மை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார், நம்மைத் தம்மிடம் கொண்டு வர ஏங்குகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காக தேவன் இயேசுவின் மூலமாய் தம்முடைய அன்பைக் காட்டினார்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் மகாதேவனே , இந்த பிரபஞ்சத்தில் உம்முடைய பெரிதான கிரியைகளில் அடியேன் ஒரு சிறிய பங்கை மாத்திரமே நிறைவேற்றுகிறேன் ஆயினும் நீர் என்னைக் கவனித்துக்கொள்வதற்காக உமக்கு நன்றி. உமது அன்பு என் அறிவுக்கு எட்டாதது அவைகள் ஆராய்ந்து முடியாது , ஆனாலும் உம் கிருபையினால் ஒரு நாள் உம்மை நேருக்கு நேர் பார்ப்பேன் என்பதை அறிவதினால் என் உடல் சிலிர்க்கிறது . இயேசுவின் நாமத்தினாலே நான் உன்னைப் போற்றுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து