இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு கூறின மிக அற்புதமான விஷயங்களில் ஒன்று, பரலோகத்திலுள்ள தன் பிதாவை நோக்கி : "நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்"...உண்மையிலேயே இயேசுவானவர் தன்னுடைய ஜீவனை விடுவதற்கு முன்னதாக "எல்லாம் முடிந்தது " என்று கூறினார். தேவனுடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக வாழ்வோம் என்பதே நம் தலையாய கடமையாகும்! இதற்காகவே நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் (எபே 1:6,12,14, 1பேதுரு 2:9-10). முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33). இப்படி செய்வோமானால் நம்முடைய வாழ்க்கையையும் கூட இயேசுவுக்கு இணையாக நிறைவுச் செய்ய முடியும்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே! என்னில் மகிமைப்படும். உம்மையும், உம்முடைய கிருபையையும் அறிந்துக்கொள்ள மற்றவர்களைக் கொண்டுவர அடியேனை உபயோகித்தருளும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து