இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனை பிரியப்படுத்தவும், அவருடைய கிருபையை விசுவாசிக்கவும் முற்படும்போது , அவர் நமக்கு இன்னும் மிகுந்த கிருபையை அளிக்கிறார் - நாம் அன்பினால் ஒருவருக்கொருவர் இணைக்கப்படுகிறோம் . இயேசுவின் மரணம் "எல்லாருக்காகவும் ஒரே தரம் " உண்டானதினால் , ​​​​நம்முடைய இருதயத்தை கிருபைக்கும் , சத்தியத்துக்கும், நேரான பாதையிலே சீர்பொருந்தும்வரை அந்த இரத்தமானது நம்மை தொடர்ந்து சுத்திகரித்து கொண்டிருக்கும் .

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , இயேசுவை ஈவாக கொடுத்ததற்காகவும் அவருடைய மரணத்தின் மூலமாய் என்னை சுத்திகரித்ததற்காகவும் உமக்கு நன்றி. அடியேனுடைய வாழ்க்கையை உமக்காக மிகவும் ஒப்புக்கொடுத்து வாழ இன்று எனக்கு உதவியருளும் . உம் சித்தத்தை நாடி, என் ஜீவியத்தை உமக்காக வாழும்போது நீர் என் பாவங்களை மன்னித்து என்னைச் சுத்திகரித்து புதிய மனுஷனாய் ஜெநிபிக்கப்படுகிறேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. எங்கள் மத்தியஸ்தராகிய இயேசுவின் மூலமாயும் அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே இந்த நன்றியறிதலுள்ள வார்த்தைகளை செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து