இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பின்புறக் கண்ணாடியில் அதிக நேரம் பார்க்கும்போது, ​ முன் கண்ணாடியின் வழியாக நமக்கு பேராபத்து மட்டுமே வந்து சேரும் ! கிறிஸ்தவர்களாகிய நம்முடைய மிக சிறந்த நாட்கள் எப்போதும் வரப்போகிற நாட்களிலேயே உள்ளன. இயேசு மறுபடியுமாய் திரும்பி வந்து, தேவனுடன் நித்திய காலமாய் வாழ நம்மை பரலோக வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்துள்ளார்! இதைவிட மிக சிறந்த எதிர்காலம் நமக்கு என்ன இருக்க முடியும்? ஆகவே, கடந்த காலத்தை குறித்ததான மகிமையான எண்ணங்கள் மற்றும் நமது எதிர்காலத்தைப் பற்றிய தவறான பார்வை , அவநம்பிக்கை ஆகியவைகளால் வழிவிலகி போகாமல் இருப்போமாக . கடந்தகால ஆசீர்வாதங்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி கூறலாம், ஆனால் அவநம்பிக்கையுடன் தற்போதைய தருணத்தை வீணாக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியைக் காண்போம், நிகழ்காலத்தில் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துவோம், மேலும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே தேவன் நம் எதிர்காலத்தையும் அவரது கரங்களில் வைத்திருக்கிறார் என்று நம்பி, நம் நேரத்தை சரியாக பயன்படுத்துவதில் உறுதியளிப்போம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , ஒவ்வொரு புதிய நாளிலும் உம் நோக்கங்களையும் ஆசீர்வாதங்களையும் எனக்கு உணர்த்துங்கள். எனக்கான உம் எதிர்கால திட்டத்தை பற்றிய ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தை நான் கொண்டிருக்க விரும்புகிறேன், மேலும் அந்த எதிர்காலத்தில் என்னைச் சந்திக்கப்போகும் என் ஆண்டவரை எதிர்பார்க்கிறேன். தயவு செய்து மெய்யான மகிழ்ச்சியுடன் வாழ எனக்கு உதவுங்கள், இன்று என்னை எந்த பாதையில் வழிநடத்தி சென்றாலும், இயேசு வந்து உம்முடன் வாழ என்னை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை நான் உம்முடன் பயணிப்பேன். இயேசுவின் நாமத்திலே , நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து