இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உதாரத்துவம் என்பது அன்பை சந்தோஷத்துடன் கிரியைகளினால் வெளிப்படுத்துவதாகும். உதாரத்துவம், நீதி ஆகிய இவ்விரண்டுமே நம்முடைய தன்னலமான உலகில் மிகவும் அவசியமான குணாதிசயங்கள் - மேலும் தேவன் நீதியும் , மிகுந்த கிருபையும், இரக்கமும்,சத்தியமும் , தயவும் நிறைந்த குணாதிசயம் கொண்டவர் (யாத்திராகமம் 34:5-7; சங்கீதம் 85:4-13). உதாரத்துவம்,விசுவாசம், அன்பு ஆகிய இந்த மூன்று குணாதிசயங்களும் நம் பிதாவினால் தொடப்பட்ட இருதயங்களிலிருந்து நம் உலகிற்கு வருகின்றன!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , எனது அன்பு, எனது நேரம், எனது மன்னிப்பு மற்றும் எனது செல்வம் ஆகியவற்றில் உதாரத்துவமாக இருக்க வேண்டியவர்களை நான் இன்று சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும். நீர் அடியேனை நடத்தியது போல, அடியேனும் அவர்களை நேர்மையாகவும் அன்புடனும் நடத்த எனக்கு உதவியருளும் . உம்முடைய தயை தேவைப்படும் மற்றவர்களுக்கு என் வாழ்வு உமது கிருபையை பிரதிபலிக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து