இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கீழ்ப்படிதல் என்பது விசுவாசத்தை கிரியைகளினால் காண்பிப்பதாகும் . கிரியை இல்லாமல், நமது விசுவாசம் உண்மையானது அல்ல என்பதை (யாக்கோபு 2) நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆகவே, வாக்குவாதம் செய்யாமலும் , இன்னுமாய் நாம் ஏன் என்று முழுமையாக புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட , விரைவாகக் கீழ்ப்படிவோம், ஏனென்றால் இயேசுவின் மூலமாய் தேவன் தமது அன்பை நமக்கு நிரூபித்ததைக் கண்டோம், மேலும் நாம் அவருக்குக் முழுமையாய் கீழ்ப்படியும்போது அவருடைய சித்தமாகிய பாதுகாப்பு நமக்குக் கிடைக்கும் என்பதை காண்கிறோம் .

என்னுடைய ஜெபம்

ஆ தேவனே , விரைவாகக் கீழ்ப்படியக்கூடிய இருதயத்தையும், கிரியையினால் தன்னை வெளிப்படுத்தும் விசுவாசத்தையும் எனக்குத் தாரும் . என் வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் நான் உம்மை பிரியப்படுத்த விரும்புகிறேன், ஆனால் இன்னும் அதிகமாக பிதாவே , உமது குணாதிசயம் , ஞானம், கிருபை நிறைந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். உம்முடைய வார்த்தைக்கு விரைவாகக் கீழ்ப்படிய எனக்கு உதவுங்கள். கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து