இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இது 1 யோவான் 2:17 க்கு ஒப்பான வசனமாகும். "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். " நம்முடைய முடிவும், எதிர்காலமும் நமது சிறிய நீலநிற கோளுடன் பிணைக்கப்பட்ட இருப்பு எல்லைகளுக்கு உட்பட்டவையல்ல. எங்கள் எதிர்காலமும், நம்பிக்கையும் மரணத்தின் எல்லைகளைத் தகர்த்து, மறுபடியுமாய் வந்து நம்மை அவருடைய நித்திய வீட்டிற்க்கு அழைத்துச் செல்லப் போகும் உயிர்த்தெழுந்த ஜெய இரட்சகரிடத்தின் மீதான விசுவாசத்தில் கட்டப்பட்டிருக்கிறது. நமது சமக்கால கலாச்சாரத்திலுள்ள பெரும்பாலான ஜனங்கள் விரைவானதையு ம், நிலையற்றதையும் நோக்கி பின்செல்லும்போது , நாமோ தேவனுடைய சித்தத்தின் படி செய்வதன் மூலம் இந்த விசுவாசத்தைக் காண்பிக்கிறோம் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , ஜெயத்தையும் , அழியாமையையும், மறுசந்திப்பையும், சந்தோஷத்தையும் உறுதி செய்தமைக்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து