இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வேத வசனத்திலிருந்து ஒரு கட்டளையை நீங்கள் கேட்கும்போது, ​​ பின் வாங்குகிறீர்களா? தட்டிக் கழிக்கிறீர்களா ? பொறுப்புகளை வேறோருவருக்கு மாற்றுகிறீர்களா ? அல்லது பிதாவை கணப்படுத்த நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? இருதயத்தில் ஞானமுள்ளவன் தேவனுடைய கட்டளைகளை ஆசீர்வாதத்தை போல ஏற்றுக்கொண்டு பத்திரப்படுத்துகிறான். மூடனோ தனக்கேற்றப்படி கட்டளையை உபயோகிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான். நாம் நேர்மையாக இருக்கிறோமா ?நம்மை நாமே , நிதானிப்போமாக! இந்த "இருவரில் நான் யார்?"

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்றவரும், கிருபையுமான தேவனே, என் பரலோகத்தின் பிதாவே, உம்முடைய சத்தியத்தையும், கட்டளைகளையும் எனக்குக் காண்பிக்கும் அளவுக்கு என்னை நேசித்ததற்காக உமக்கு நன்றி. தயவுகூர்ந்து என் கீழ்ப்படிதலைப் உபயோகித்து உம்முடைய குணாதிசயங்களை என்னுள் உருவாக்கி , என் வாழ்க்கையில் நீர் அனுமதித்தவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்படி என்னுடைய மாதிரியை மாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து