இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் யாரைப் பின்பற்றபோகிறோம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? தேவனுக்கு உண்மையாகப் பேசுபவர்களிடமிருந்து கள்ள போதகர்கள் மற்றும் வஞ்சகர்களை எப்படி கண்டுபிடிக்க முடியும்? இயேசு வந்து நமக்கு அந்த மாபெரிதான சோதனையைக் காண்பித்தார் ; அவர் நல்ல மேய்ப்பராக இருக்கிறார், ஏனென்றால் அவர் தமது ஆடுகளாகிய நமக்காக தம் ஜீவனையே கொடுத்தார் !

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனே , இயேசுவை என் மேய்ப்பராக அனுப்பியதற்காக உமக்கு நன்றி. எனக்காகவும் உலகில் உள்ள அனைவருக்காகவும் அவர் தனது ஜீவனை கொடுக்க வழிவகுத்த அன்பு, விசுவாசம் , தைரியம் மற்றும் நம்பிக்கைக்காக நான் உம்மை போற்றுகிறேன் . கர்த்தராகிய இயேசுவே, உமது தியாக அன்பிற்காகவும், பரிபூரண தியாகத்திற்காகவும் நான் உம்மைப் போற்றுகிறேன். தேவனே , "இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக " (வெளிப்படுத்துதல் 7:10), என் நல்ல மேய்ப்பன் யார் (யோவான் 10:11) , எனது ஆழ்ந்த பாராட்டுகளையும் அன்பான துதியையும் ஒப்புவிக்கிறேன் ! உலகின் ஒரே இரட்சகராகிய என் மேய்ப்பராகிய இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து