இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுலானவர் உபத்திரவத்தை நன்கு அறிந்திருந்தார் : 2 கொரிந்தியர் 11: 22-33 இல் அவர் எதிர்கொண்ட சில கடினமான சவால்களின் பட்டியலைப் கவனித்து பாருங்கள். அவருடைய " இக்காலத்திற்குரிய பாடுகள்"நாம் ஒப்பிடும்போது பெரும்பாலான நம்முடைய துன்பமான காரியங்கள் பழகினவைகளாய் தோன்றும் . இருப்பினும், பவுல் தன்னுடன் கிறிஸ்துவுக்கு இருக்கும் மகிமை (கொலோ 3:1-4) மிகவும் நம்பமுடியாததாக இருக்கும் என்றும், மிகவும் அற்புதமான ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடுகையில் அவருடைய உபத்திரவங்கள் சிறியவைகளாய் தோன்றும் என்றும் உறுதியாய் கூறுகிறார். அந்த மகிமை நம்முடையதாய் இருக்கும் ! இப்பொழுது இவை அருமையான செய்திகள் அல்லவா .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் அற்புதமானவர், மகிமையுள்ளவர், மகத்துவமுள்ளவர். நீர் தாழ இறங்கி உம்முடைய கிருபையினால் என்னை இரட்சித்ததற்காக உம்மை துதிக்கிறேன். பிதாவே, அநேக வேளைகளில் என்னுடைய விசுவாசம் வலிமை வாய்ந்ததாயிருக்கிறது , என் எதிர்காலத்தைப் பற்றி நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன். இருப்பினும், சில வேளைகளிலே நான் கடுமையான துன்பங்களை எதிர்கொள்ளும்போது என்னுடைய விசுவாசம் அலைப்புண்டு போகிறது . அன்புள்ள தேவனே, இயேசுவானவர் மறுபடியுமாய் வரும்பொழுது நீர் பகிர்ந்துகொள்ளும் மகிமையை ஒப்பிடும்பொழுது உபத்திரவங்கள் உண்மையில் சிறியவை என்ற நம்பிக்கையுடன் அந்த சவால்களை எதிர்க் கொள்ள எனக்கு தைரியத்தையும் உறுதியையும் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து