இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய பரந்து விரிந்த மகத்தான தன்மையையும், அவருடைய வல்லமையின் அற்புதமான அகலத்தையும், அவருடைய மகிமையின் மகத்துவத்தையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ஒரு விஷேசமான உண்மை என்னவென்றால் , நம்பமுடியாததாகத் தோன்றினாலும், தேவனானவர் நமக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் மற்றும் வெற்றிகளில் அவர் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் செய்கிறார். அவருடைய மாறாத சமூகத்தையும், தோழமையையும் நீங்கள் அறிந்திருப்பதால் இன்று அல்லது நாளை எப்படி வித்தியாசமாக இருக்கும்? உங்கள் கால் சறுக்கும் வேளைகளில் அவர் உங்களை ஆதரிக்கிறார் அல்லது உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது அவரது ஆறுதல் அருகில் இருப்பதை அறிவதில் என்ன வித்தியாசம்?

என்னுடைய ஜெபம்

அன்பான தேவனே , எல்லா இடங்களிலும் இருந்தாலும் எப்போதும் என் அருகில் இருக்கிறீர் , தயவுசெய்து என் இதயத்தைக் கேளுங்கள். என் அருகிலும் எனக்குள்ளும் உம் பிரசன்னத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். நான் முற்றுகைக்கு உள்ளாகும்போது நீர் தரும் ஆறுதல், நான் பலவீனமாக இருக்கும்போது நீர் வழங்கும் வலிமை, நான் தாக்குதலுக்கு உள்ளாகும்போது நீர் கொடுக்கும் தைரியம், எல்லாமே நம்பிக்கையற்றதாகத் தோன்றும்போது நீர் தரும் நம்பிக்கை - உம் பிரசன்னத்தின் இந்த ஈவுகள் எனக்கு விலையேறப்பெற்றவை. உம் பிரசன்னம் இல்லாமல் நான் எங்கு செல்வது அல்லது நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. என்னை அறிந்ததற்கு நன்றி. இன்று நீர் என்னை அறிந்திருப்பது போல் ஒரு நாள் உம்மை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து