இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கையின் மிகவும் குழப்பமான சூழ்நிலையிலுள்ள ஒருவரால் , இந்த வாக்குதத்தத்தை நம்புவது என்பது அப்பாற்பட்ட காரியமாகும் - எதுவும் என்னை இடறிவிழ செய்ய முடியாது! ஆனால் வாழ்க்கையை வாழும்போது, ​​நான் தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதை விரும்பி, அதைச் செய்தால், எதுவும் என்னை இடறிவிழ செய்ய முடியாது. பிதாவானவர் என்னை நேசிக்கிறார், நான் இடறிவிழ விரும்புவதில்லை என்பதை அறிவது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

இந்த நாளுக்காக உமக்கு நன்றி தேவனே . எனக்கு முன்னால் இருக்கும் அனைத்திற்காகவும் உமக்கு நன்றி. இன்றோ அல்லது நாளையோ என் அடிப்படை தேவைகள் பற்றிய சந்தேகங்களுடனும், என் வாழ்க்கைக்கான உம்முடைய சித்தத்தை உணராமலும் நான் அவைகளை எதிர்க்கொள்ள வேண்டியதில்லை என்பதற்காக உமக்கு நன்றி. எதுவும் என்னை இடறிவிழ செய்யாதபடி, உமது சித்தத்தின் மீதும், உமது வார்த்தையின் மீதும் எனக்குள் அன்பை பொங்கியெழச் செய்யுங்கள் . உமது ஆவியினால் எனக்கு அதிகாரம் அளித்து, உமது சத்தியத்தால் என்னை வழிநடத்துங்கள், அதனால் நான் உமது குணாதிசயத்தை இன்னும் சிறப்பாகப் பிரதிபலிக்க முடியும். என் ஜெபத்தைக் கேட்டதற்காக இயேசுவின் நாமத்தினாலே நன்றி கூறுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து