இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருபுறம், தேவன் மீது நம்பிக்கை வைப்பது நம் எல்லா பிரச்சனைகளையும் போக்குகிறது என்று எண்ணுவது எளிமையாக இருந்தாலும் - கிறிஸ்தவர்களும் அதே அழிந்துபோகிற மாம்சத்தையேப் பகிர்ந்து கொள்வதால் அவிசுவாசிகளுக்கு வரும் அதே பிரச்சனைகள் பலவற்றை சந்திக்கிறார்கள் , மறுபுறம் அது உண்மை. நாம் தேவனை விசுவாசித்தால் , நாம் கையிட்டு செய்யும் வேலை ஜெயமோ அல்லது தோல்வியோ அது அவருடைய கரங்களில் இருக்கிறது என்று நம்புகிறோம், இறுதியிலே அவருடைய மகிமையின் ஜெய பிரசன்னத்தில் பங்கு கொள்வோம். இதன் மூலமாக நாம் உணர்ந்து கொள்வது நம் வாழ்க்கை விருதாவாக போவதில்லை என்று அர்த்தம். அது வெறும் நம்பிக்கையல்ல; இது மெய்யான சமாதானத்தின் அஸ்திபாரம் - வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் முக்கியமானது என்பதை அறிந்து, வாழ்க்கை அதன் முழுமையான மற்றும் வளமானதாக வாழ்ந்தது, மேலும் நம் வாழ்க்கை தேவனின் கரங்களை சார்ந்தது வாழும்போது அதின் முடிவுகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள சமாதானத்தின் பிதாவே , என் வாழ்க்கை விருதாவாக போவதில்லை என்ற வாக்குத்தத்தத்தை எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி. அந்த சமாதானத்தை இன்றே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சமாதானத்தின் பிரபுவாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து