இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிலேமோனை குறித்து சொன்ன இந்த விவரிப்பு உங்களை குறித்தும் இப்படி சாட்சி கொடுத்தால் மிகச் சிறந்ததாக இருக்கும் அல்லவா? தேவனுடைய குடும்பத்தில் இந்த நற்பெயரைப் பெற நான் விரும்புகிறேன் என்று எனக்கு நன்றாய் தெரியும்! ஒரு ஆறுதல் அளிப்பவரால் நேசிக்கப்படுவதும் ஆதரிக்கப்படுவதும், உங்களுடைய இருதயத்தை இளைப்பாறுதல் அடையச் செய்வதும் , உங்கள் அணுகுமுறையை உயர்த்துவதும் ஆகும். இந்த வாரம் நம்மைச் சுற்றியுள்ளவர்களின், குறிப்பாக தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினராகிய சபையில் உள்ளவர்களின் இருதயங்களைப் இளைப்பாறுதல் அடையசெய்யும் ஒரு "ஆறுதல் உண்டாக்குபவராக " இருக்கும்படி உறுதியளிப்போம் .

என்னுடைய ஜெபம்

இரக்கமும், அன்பும் நிறைந்த தேவனே , எனக்கு மிகவும் தேவைப்படும்போது என்னை ஆறுதலடையச் செய்யும் மக்களை என் வாழ்க்கையில் வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி. என்னைச் சுற்றிலும் உள்ள மக்களுக்கு என் ஆறுதல் தேவைப்படுபவர்களை பார்க்கும்படி நல்ல கண்களையும், அப்படியே கண்டு அவர்களுக்கு ஊழியஞ்செய்ய இருதயத்தையும் எனக்கு தயவாய் தந்தருளும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து