இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக வேளைகளில் நாம் தேவனுடைய சிருஷ்டிப்பின் அற்புதங்களிலும், அவருடைய கிருபையின் அற்புதமான ஆசீர்வாதங்களிலும் மூழ்கி மகிழ்ந்து , அவருடைய சத்தியத்தை நமக்கு போதிக்கும்படி அவரிடம் கேட்க மறந்துவிடுகிறோம். அவருடைய மகத்துவமான சிருஷ்டிப்புக்காக அவரைப் பிரமிப்புடன் துதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய சித்தத்தை உணர்ந்து, அதை நம்முடைய அனுதின வாழ்வில் பிரயோகித்து , அவரை தொழுது கொள்ளவும் செய்வோமாக .

Thoughts on Today's Verse...

Sometimes we get so caught up in the wonders of God's creation and the marvelous blessings of his grace we forget to ask him to teach us his truth. Let's not only worship him in awe for his majestic creation, but let's also worship him by learning his will and seeking to live it in our daily lives.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், விலையேறப்பெற்றதுமான பிதாவே, உமது சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். உம் சித்தத்திற்கு நேராய் என்னை வழிநடத்தும் . உமது ஞானத்தினாலே என்னை நற்பாதையிலே வழிநடத்தும் . நீர் என்னை என் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே அடியேனுக்குக்கென்று வைத்துள்ள திட்டங்களை என்னுடைய ​​வாழ்க்கையும், எனது விருப்பங்களும பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் இவற்றைக் கேட்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and Precious Father, teach me your truth. Lead me to your will. Guide me in your wisdom. I want my life and my choices to be a reflection of your plan for me when you made me new in my mother's womb. In the name of Jesus I ask these things. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம் 119:64

கருத்து