இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று தேவனுக்காக வாழ வேண்டும் என்ற துரித உணர்வை இழக்கும்போது நாம் நாட்களை வீணடிக்கிறோம்! நமக்காகவும், நம் உலகத்திற்காகவும், அவருடைய சபைக்காகவும் தேவனானவர் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். தேவன் தமது ஆவிக்குரிய வகையில் நாட்களை திட்டமிடும் ஈவை கொடாவிட்டால் ("எங்கள் நாட்களை எண்ணும் அறிவை ") , நாம் ஒருபோதும் "ஞான இதயத்தைப் பெற முடியாது." அப்படியென்றால் அத்தகைய வரத்தை எப்படிப் பெறுவது? சந்தேகமில்லாமல் ஜெபியுங்கள், தேவனுடைய உதவியைக் கேளுங்கள் (யாக்கோபு 1:5-7). இயேசு நமக்கு எப்பொழுதும் சமீபமாக இருக்கிறார் என்பதை அறிந்து நாம் ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம் (பிலிப்பியர் 4:5; ரோமர் 13:11) நமக்காக அவர் திரும்பி வரப்போகிறார் என்பதை எதிர்நோக்குகிறோம் (லூக்கா 12:35-40; 1 தெசலோனிக்கேயர் 5:1-11). ஞானத்திற்காக தேவனை நம்பிக்கொண்டு ஆண்டவராகிய இயேசுவின் வருகையை எதிர்நோக்கி , நாம் எவ்வாறு நம் வாழ்க்கையை நடத்துகிறோம் மற்றும் நமது முன்னுரிமைகளை எப்படி அமைக்கிறோம் என்பதை பெரிதும் பாதிக்கிறது. எனவே, இருதயத்தை இழப்பதற்குப் பதிலாக, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே , யுகங்களின் ராஜவே , நீர் மட்டுமே முழுமையான ஞானம், நீதி மற்றும் கிருபையுடன் வாழ்கிறீர். எனது வாழ்க்கையில் இது எப்படிப் பட்ட நேரம் என்பதையும், எனது பயணத்தின் இந்த கட்டத்தில் நான் வகிக்க விரும்பும் பாத்திரத்தையும் அறிய எனக்கு உதவுங்கள். நேரத்தை வீணாக்காமல், உம்மை மகிமை படுத்தி என் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் விலையேறப் பெற்ற நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து