இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சந்தோஷம் நாம் கொண்டிருக்கும் பொருட்களில் அல்ல, தேவனுக்குள்ளாக கிடைக்கிறது . அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார், ஏந்துகிறார், உதவுகிறார், பாதுகாக்கிறார், ஆதரிக்கிறார் என்பதை அறிவதில் சந்தோஷம் உண்டாகிறது . நான் எப்படி சந்தோஷமில்லாமல் இருக்க முடியும்? தேவன் என்னை மிகவும் நேசிக்கிறார், நான் அவருடைய மகிமையில் பிரவேசிக்கும்படி அவர் தனது மிகப்பெரிய பொக்கிஷமாகிய பரலோகத்தை விட்டு இறங்கி வந்தார். அவருடைய கிருபையால் அந்த சந்தோஷம் என்னுடையதாயிற்று.

Thoughts on Today's Verse...

Joy is found in the Lord, not in things. Joy is found in knowing that he always accompanies, sustains, helps, protects, and upholds me. How can I not rejoice? God loves me so much that he emptied heaven of his greatest treasure so that I could join him in glory. Joy is mine because of his grace.

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற பிதாவே , எப்பொழுதும் என்னுடனே இருப்பதற்காகவும், என் உள்ளத்தில் இருக்கிற காரியங்களை அறிந்து கொண்டு, என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விதத்தில் என்னை பராமரித்து கொண்டதற்காக உமக்கு நன்றி. உம்மை முகமுகமாய் அறிந்து கொள்ளவும், பரலோகத்தின் எல்லையற்ற சந்தோஷத்திலே உம்முடன் பங்குகொள்ளவும் நான் ஏங்குகிறேன். அதுவரை, என் எதிர்காலம் உம் கரங்களில் இருக்கிறது என்பதை நான் அறிவதால் மெய்யாகவே மகிழ்ச்சியடைகிறேன்! என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்து நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

My Prayer...

Precious Father, thank you for always being there and knowing what is on my heart and caring for me in ways that I cannot even imagine. I long to know you face to face and share in the unbridled joy of heaven with you. Until then, I truly rejoice because I know my future is in your hands! Thank you in the name of Jesus Christ my Lord. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  பிலிப்பியர் 4:4

கருத்து