இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய மக்கள் சரீர பிரகாரமான காரியங்களிலும்,ஆவிக்குரிய காரியங்களிலும் இக்கட்டான நிலையில் இருந்த காலத்தில், அவர் நியாயத்தீர்ப்பை வாக்களித்தார் - அவர்களுக்கும் அவர்களை ஒடுக்குபவர்களுக்கும் நியாயத்தீர்ப்பை அளித்தார் . நியாயத்தீர்ப்பு ஏன் வருகிறது என்பதையும் அவர் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர் தமது மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணுவார் , அதனால் அவர்கள் அவரை அறிவார்கள், யெகோவா - "அவருடைய ஜனங்களின்" தேவன் மற்றும் அனைத்து ராஜ்யங்களின் தேவன் . நாம் வாழும் நாட்களில் தேவன் தமது மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் விளங்கச் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா ? தேவனானவர் யார், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதினாலே மகிமைப்படுவது எத்தனை வியக்கத்தக்கது . அந்த நாள் மிக சீக்கிரமாய் வரட்டும்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம்முடைய குறைபாடுள்ள மற்றும் மரணத்துக்கேதுவான பிள்ளையாக, உம்மைப் பற்றிய தைரியமான வெளிப்பாட்டிற்கு நான் பயப்படுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். உம்முடைய மாபெரிதான மற்றும் ஒப்பற்ற மகிமையுடன் ஒப்பிடும்போது மனிதர்களாகிய நாங்கள் சாதாரணமானவர்கள் மற்றும் பலவீனமானவர்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உம்முடனான எனது உறவின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது! மேலும், அன்பான பிதாவே , அடியேன் வாழும் நாட்களில் நீர் கனம் பண்ணப்படுவதையும் உம் நாமம் போற்றப்படுவதையும் நான் விரும்புகிறேன். உம்முடைய நாமம் வீணாகப் பயன்படுத்தப்படுவதையும், உம் மகிமை இழிவுபடுத்தப்பட்டதையும் கேட்டு நான் சோர்ந்து போகிறேன் . எல்லா தேசங்களுக்கு மேலாக நீர் மகிமைப்படுவீராக ! உம் பரிசுத்த மாட்சிமையை வெளிப்படுத்தும் ,அதனால் நீர் மாத்திரமே மெய்யான மற்றும் ஜீவனுள்ள தேவன் என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள்! இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து