இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களை உற்சாகப்படுத்தவும் ,நியாயந்தீர்க்கவும் , ஊக்கப்படுத்தவும், குற்றவாளியென்று நிரூபிக்கவும் , அறிவுறுத்தவும், உயிர்ப்பிக்கவும் தேவ ஆவியானவரின் வார்த்தையைப் பயன்படுத்தி , உங்கள் ஆவியினை வகையறுக்க செய்ய தேவனை நீங்கள் எவ்வளவு அதிகமாக அனுமதிக்கிறீர்கள்? நம்மில் பெரும்பாலனோருக்கு இது போன்ற ஒரு சிறந்த கருவி மிகவும் எளிதில் கைவசம் இருப்பதால், தேவன் தனது வார்த்தையை இருதயங்களில் பயன்படுத்த அனுமதிக்காத ஒரு நாளையும் வீணாக்ககூடாது .

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , உமது சித்தமே என் இருதயத்தின் வாஞ்சையாயிருக்கிறது . ஆனால் வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உமது வார்த்தையின் மூலம் நான் இன்னும் தொடர்ந்து போதிக்கப்பட வேண்டும் என்பதை நான் உணர்கிறேன். உமது வார்த்தையின் மூலம் உம்முடன் நான் நடக்கையில் எனக்கு பெலத்தையும் நிலைத்து நிற்கின்ற தன்மையையும் தாரும் . உம் ஆவியின் மூலமாய் , மாற்ற வேண்டியதை மாற்றவும், எனக்கு மிகவும் தேவைப்படும் பகுதிகளில் ஆசீர்வதிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படவும் என்னை உற்சாகப்படுத்துங்கள் . நான் உம்மிடமாய் திரும்பி, உம் வாழ்க்கையின் வழியில் என்னை நடத்தப்பட உம் வார்த்தையின் மேல் நம்பிக்கை வைக்கிறேன். உமது மேலான வார்த்தையாகிய நாசரேத்தின் இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து