இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார் ! பரிசுத்த வேத வசனம் அதை உறுதி செய்கிறது . இயேசுவானவரின் வாழ்க்கை அதை நமக்கு நிரூபிக்கிறது.நாம் அதை அனுபவித்திருக்கிறோம். குறிப்பாக காரியங்கள் நாம் எண்ணினபடியாக நடக்காதபோது, தேவனிடமிருந்து மன்னிப்பு மற்றும் சுத்திகரிப்பதற்கான வாக்குறுதியை நாம் போற்றுகிறோம். ஆகவே, சாத்தான் நம்மைச் சோதனையில் சிக்க வைக்கும்போது, ​​அல்லது நாம் பலவீனமாகவோ அல்லது தேவனுக்கு எதிர்த்துநின்ற போது , ​​நாம் மன்னிக்கப்பட்டு மீண்டும் சுத்திகரிப்படுவதுமிகவும் ஆறுதலளிக்கிறது அல்லவா? நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். எண்ணி முடியாத அளவிற்கு, தேவன் நம்மை மன்னிப்பது மாத்திரமல்ல அதை விட மேலாக செய்கிறார். அவர் நம்மை சுத்திகரித்து . நாம் மீண்டும் புதியவர்களாகவும் , புத்துணர்வுடனும் , தூய்மையாகவும், பரிசுத்தமாகவும் மறுபடியுமாய் ஜெநிப்பிக்கப்பட்டோம் ! அது உண்மையுள்ளவராகவும், நீதியுள்ளவராகவும் இருப்பதை விட மிக அதிகம்; அது அவரது மாபெரிதான கிருபை.

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம்முடைய கிருபை நிறைந்த மன்னிப்புக்கும் மற்றும் என்னைச் சுத்திகரிப்பதற்காகவும் எனது ஸ்தோத்திரங்களை கூற அடியேனிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. எனது பெலவீனங்கள், தடுமாற்றங்கள் மற்றும் எதிர்த்து நின்ற வேளைகளுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். உம்மை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். உம்முடைய பரிசுத்த சமூகத்தில் என்னை மீண்டும் ஏற்றுக்கொண்டு , அடியேன் உம்முடைய அன்பு பிள்ளை என்பதை நினைப்பூட்டியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. எனது தோல்விகளைக் கடந்து வெற்றி பெறுகிறவர்களாகவும் , உமது குமாரனாகிய இயேசுவின் பரிசுத்ததிற்கு இணையாக வளர எனக்கு பெலன் தாரும் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து