இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிருபையை எங்கள் கண்ணோட்டத்திலும் , நீதிமான்களுக்காக மற்றும் நீதிக்கான வழிமுறையாக நியாயப்பிரமாணச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதிலுமிருந்து விடுவிக்கப்பட்டதால், இது மிகவும் பொருத்தமான ஜெபமாக இருக்கும் . ஒரு சமூகத்தில் ஆத்துமாவைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் எந்தக் கொள்கையும் இல்லாதபோது நாம் நம் உலகைச் சுற்றிப் பார்த்கும் வேளைகளில் அக்கிரமத்தையும், கொடூரத்தையும் மட்டுமே பார்க்க முடிகிறது . தேவனின் சட்டம் பல அற்புதமான ஆசீர்வாதங்களை நமக்கு தருகிறது , நாம் அதை அனுமதித்தால் அவைகள் இன்றும் நம்மை ஆசீர்வதிக்க முடியும். ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இயேசுவானவரே , தேவனுடைய வாக்குத்ததங்கள் அனைத்தும் அவருக்குள் ( இயேசு )நிறைவேறிற்று .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , உம்முடைய நீதிக்காக உமக்கு கோடான கோடி நன்றி. நீர் பூமியை நியாயந்தீர்க்கும்போது நீதியை வழங்குவீர் என்றும் , எல்லா அநீதிகளையும் முடிவுக்கு கொண்டுவருவீர் என்றும் எனக்குத் தெரியும். இது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது, ஏனென்றால் இயேசுவின் மூலம் நீர் என்னை உம்முடைய நீதியுள்ள பிள்ளையாகப் பார்க்கிறீர் என்பதை நான் அறிவேன். உமது குமாரன் இந்த பூமியில் சுற்றிவந்தபோது எப்படி ​​உமக்கு கனத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் வாழ்ந்தாரோ , அப்படியே அடியேனும் அவருடைய குணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ வேண்டும் என்பதே இன்றைய எனது ஜெபமாயிருக்கிறது . என் கர்த்தரும் மேசியாவுமான இயேசுவின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து