இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய வாக்குத்தத்தம் , தேவனின் சத்திய வசனம் , அனைத்து விதமான மக்கள் மற்றும் போட்டி நிறைந்த உலகில் நம் வழியைக் கண்டறிய உதவுகிறது, சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையுள்ள நேரத்தில் சரியான நம் பாதையை ஒளிரச் செய்கிறது. தேவனுடைய விருப்பத்தை நம் சொந்த வார்த்தைகளில் தெரிந்து கொள்ள எவ்வளவு பெரிய கிருபை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது ! இப்போது நாம் வெளிச்சத்தில் நடப்போம் என்று நம்மை ஒப்புக்கொடுப்போம் !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , வேதத்தில் உமது சத்தியத்தை எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. உம்முடைய நற்செய்தியை நான் கேட்கவும் படிக்கவும் தாய்மொழியில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நீர் என்னை நேசிக்கிறீர்கள் என்பதை அறிவது எனக்கு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. உமது வார்த்தையில் வெளிப்படும் உமது சத்தியத்திற்காக என் இருதயத்திலே தாகத்தை உண்டுப்பண்ணும் . உம்முடைய குடும்பத்தில் நான் நேர்மையான மற்றும் இரக்கமுள்ள பிள்ளையாக வளர விரும்புகிறேன். என்னுடைய மூத்த சகோதரரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே நான் முழு அன்புடன் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து