இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"ஒரு குறிப்பு கூட இல்லை!" நான் கலந்துகொள்ளும் திருச்சபையும் , கண்ணாடியில் நான் அடிக்கடி காணும் நபரும் எனக்கு இந்த உத்தரவை முழுமையாக அளவிட "ஒரு குறிப்பும் கூட இல்லை...! நமது சமூகத்தின் வேசித்தனத்தின் செறிவூட்டல் அல்லது அசுத்தமான விஷயங்கள் உங்களுக்குள்ளே இல்லையென்றாலும் . ஆனால் பொருளாசை நம்மை அடிக்கடி ஆட்கொள்ளுகிறது. வெளிப்படையான அனுபவிக்கும் உலகில், பொருளாசை இந்த நவீன காலத்தின் வேசித்தனமும் மற்ற எந்த அசுத்தத்தின் தன்மையைப் போலவே என்னை ஆட்கொள்ளுகிறது , ஏனென்றால் அது மற்ற சோதனைகளைப் போலவே சுயநலத்தில் வேரூன்றியுள்ளது. நாம் வேசித்தனம் அல்லது அசுத்த காரியங்களின் தன்மையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம் , ஆனால் நம் சொந்த பொருளாசைக்கு நாம் மிகவும் கசப்பானவர்களாகவும், குருடர்களாகவும் ஆகிவிட்டோம். இந்த ஆண்டின் கடைசி காலத்தில் இருக்கிற நாம், நமது "விரும்புதல்", "பெறுதல்" மற்றும் "உடைமை" குறித்து நேர்மையாக நம் இருதயங்களை ஆராய்ந்து பார்ப்போம் . ஆகவே பகிர்ந்துகொள்ளும், அக்கறையுள்ள, நன்றிசெலுத்தும் மக்களாக நாம் இருக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமுள்ள தேவனே , தன்னலமாகவும் பொருளாசையுடனும் இருந்த என் எண்ணங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . தயவு செய்து உம்மைப் போன்ற தாராளமுடனும் , இரக்கத்துடனும் மற்றும் அன்பு கொண்ட இருதயத்தை எனக்கு தாரும் . என்னைப் போன்ற பாவிகளுடன் - உமது குமாரனும் என் இரட்சகருமான இயேசுவோடு உமது விலையேறப்பற்ற ஈவை பகிர்ந்து கொண்டபோது உம்முடைய தயவுள்ள இருதயத்தை வெளிப்படுத்தினீர் . இப்போது, ​​நான் உம்மோடு உணவருந்தும் உம் ஒரு பிள்ளையாக மற்றும் இயேசுவின் மூலமாய் உம்முடைய குமாரனும் குமாரத்திகளுமாய் மாறும்படியான ஒரு புத்திரசுவீகாரத்தை பெற்றுக்கொண்டதற்காக நன்றி .அன்பான பிதாவே , உதாரத்துவத்துடனும், இரக்கத்துடனும் இருக்க என்னை உமது பரிசுத்த ஆவியை கொண்டு ஏவியருளும் . எல்லாவற்றிலும் மேலான பெரிய ஈவாகிய , இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து