இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இயேசுவோடு நடப்பதன் நோக்கம் , அவர் பிதாவை அறிந்திருப்பது போலவே, நாமும் அவரை நம் மேய்ப்பராக அறிந்துகொள்வதாகும். நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்: பலர் நம் கவனத்தை ஈர்க்க விரும்பும் மற்றும் நமக்கு அநேக ஆலோசனைகளை வழங்க தயாராக இருக்கும் உலகில், நாம் அவர்களுடைய வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல் இருக்கலாம் . ஆனால்,நாம் இயேசுவானவருக்கு நாம் செவி கொடுக்க வேண்டும் , ஏனென்றால் அவர் நமக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதன் மூலம் நம்மீது உள்ள அன்பை விளங்கச்செய்தார் . அவர் கூலிக்கு வேலை செய்பவர் அல்ல, அவரே நல்ல மேய்ப்பன்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , நீர் விவரிக்க முடியாத அளவுக்கு அற்புதமானவர் மற்றும் தயாளர் . உமது குமாரனை எங்களுக்கு மேய்ப்பனாக அனுப்புவதன் மூலம் உமது அன்பை வெளிப்படுத்தினீர் . உமது வார்த்தையின் மூலமாக அவருடைய வார்த்தையை கேட்க எனக்கு உதவி செய்யும் . ஆவிக்குரிய நண்பர்களின் ஞானமான ஆலோசனையின் மூலம் அவருடைய வார்த்தைகளை கேட்க எனக்கு உதவுங்கள். நாங்கள் கூடியிருக்கும்போது என் சகோதர சகோதரிகள் எனக்குப் பாடும் பாடலின் வார்த்தைகளின் மூலம் அவருடைய சித்தத்தை கேட்க எனக்கு உதவுங்கள். என் மனதிற்குள்ளாய் பரிசுத்த ஆவியியானவர் கிரியை செய்து அவருடைய வார்த்தைகளை கேட்க எனக்கு உதவுங்கள். பிதாவே, உமது குமாரனை என் மேய்ப்பனாகவும் ஆண்டவராகவும் பின்பற்ற விரும்புகிறேன், ஏனென்றால் அவர் உம்மைப் போலவே நல்லவர் என்று எனக்குத் தெரியும்! என் மேய்ப்பனாகிய கர்த்தருடைய நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து