இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கலாம். இறுதியில், நம் சரீரம் மரிக்கப் போகிறது. வாழ்க்கையின் ஜீவியத்தில் , நாம் சில போராட்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளப் போகிறோம் மற்றும் சில கடினமான வலிகளை அனுபவிக்கப் போகிறோம். ஆனால், வாழ்க்கையின் கடினமான உண்மைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நாம் நினைப்பதற்கு மேலான ஒரு நித்திய மகிமையை நோக்கி நாம் செல்கிறோம். நமக்கு காத்திருக்கும் இந்த மகிமையுடன் வாழ்க்கையின் இன்னல்களை ஒப்பிட முடியாது. நம்முடைய பாடுகள் தற்காலிகமானது. நமக்கு வலியை உண்டாக்கும் விஷயங்கள் தற்காலிகமானவை. சிகிச்சைகள், மருந்துகள், குணப்படுத்துதல் , அறுவை சிகிச்சைகள், பின்னடைவுகள் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவை. நாம் கண்டும் , அனுபவித்த இவை அனைத்தும் கடந்து போகக்கூடியவை . ஆனால் நமது நித்திய மகிமை, விவரிக்க முடியாத பேரின்பம், நம்மால் இன்னும் பார்க்க முடியாத அந்த அற்புதமான எதிர்காலம், நித்தியமானது... என்றென்றும்... அழியாதது... மற்றும் தேவனின் விலையேறப்பெற்ற பிள்ளைகளாகிய நமக்காக முன்குறிக்கப்பட்டது !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , என் அப்பா பிதாவே , என் வாழ்க்கையின் வலி மற்றும் கடினமான சூழ்நிலைகளின் போது தயவுசெய்து என்னுடன் இருங்கள். காணப்படாதவைகளின் மேல் என் இருதயம் நோக்கமாய் இருக்க உதவியருளும். கூடுதலாக, அன்புள்ள பிதாவே, நான் அன்புக்கூரும் மக்களின் வாழ்க்கையில் நீர் இருக்க வேண்டும் என்று அடியேன் ஜெபிக்க விரும்புகிறேன் . தயவு செய்து அவர்களை சுகப்படுத்தும் . குணமடையவில்லை என்றால், அன்பான தந்தையே, பரிசுத்த ஆவியின் மூலமாய் அவர்களின் இதயங்களில் உமது அன்பை ஊற்றி, அவர்களுக்கு உறுதியான விடாமுயற்சியையும் அழியாத நம்பிக்கையையும் கொடுத்து, உம்முடைய மகிமையைக் காண அவர்களுக்கு உதவிச்செய்யும் . இயேசுவின் நாமத்தினாலே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து