இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தர் தம்முடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற நம் வாழ்வில் எத்தனை பாடுகளை பயன்படுத்துகிறார் என்பது ஆச்சரியமாக இல்லையா? அந்த நாட்களிலுள்ள அவர்களின் பயண முறைகளை கருத்தில் கொண்டு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பயணத்திற்குச் செல்வதற்கான மோசமான அவர்களுடைய சூழ்நிலையை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா ? ஆயினும் தேவதூதர்கள் தங்கள் சந்தோஷத்தை கண்டறிந்த தருணமாக தேவன் அதை மாற்றினார், சாத்தானும் அவனுடைய எதிராளியாகிய தேவ குமாரனை சந்தித்தான்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , வரலாற்றின் பின்னால், குறிப்பாக நான் வாழும் வரலாற்றின் பகுதிக்குப் பின்னால், உமது கரம் எப்போதும் என் மீட்பிற்காகவும், உமது மகிமைக்காகவும் கிரியை நடப்பித்து கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி. இக்கட்டான காலங்களைச் கடந்து செல்ல எனக்கு நம்பிக்கை தாரும் , அந்தக் கஷ்டங்களின் மூலமாய் நீர் என்னில் உம்முடைய அடுத்த பெரிய கிரியையை நடத்த என்னை தயார்ப்படுத்தி ஏற்ற வேளையில் பயன்படுத்துவீர் என்பதை அறிந்து கொள்ளுகிறேன் . தேவதூதர்களின் சந்தோஷத்தை உண்டுப்பண்ணின இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து