இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகில் கொண்டுவர தேர்ந்த இடத்தைக் கண்டு நான் எப்போதும் வியப்படைந்திருக்கிறேன். அவர் எப்படி வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அவர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார் - கடினமான சூழ்நிலைகளில் கொடிதான காலங்களில் இவ்வுலகிற்குள் பிரவேசிக்க ஒரு எளிய குழந்தையாக, பலவிதமான பலவீனங்களால் நிறைந்த பெற்றோரால் பராமரிக்கப்பட வேண்டும் என்று நியமித்தார் . இன்னும் அதிக சவால்களும், ஒரு குழப்பம் நிறைந்த எதிர்காலம் அவர்களுக்கு இருந்தபோதிலும், யோசேப்பும் மற்றும் மரியாளும் - அவர்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் - இந்த முதற்பேறான குமாரனின் நிமித்தமாக மிகுந்த மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர் . அத்தகைய புதிய நம்பிக்கைக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக !

என்னுடைய ஜெபம்

தேவனே , உமது இரக்கமும், கிருபையும் விசேஷமான வழிகளில் என் மீது பொழியப்படுவதை நான் எப்பொழுதும் காணும்படி, விசுவாசமுள்ள இருதயத்தை எனக்குத்தாரும் . இப்பிரபஞ்சம் முழுவதையும் சிருஷ்டித்தவரும் இன்னுமாய் அதை நிலைநிறுத்துபவரான நீர், உம்முடைய நேச குமாரனை இந்த உலகில் ஜெனிபிக்க தேர்ந்தெடுத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உம் அற்புதமான இரட்சிப்பை மாம்சமான யாவருக்கும் அளித்ததற்காக உமக்கு நன்றி, அதினால் எங்களை உமக்கான தகுதியுள்ள ஜனங்களாக எண்ணி உமக்கென்று பரிசுத்தவான்களாய் இவ்வுலகில் வாழ செய்கிறீர் என்பதை எங்களால் அறிந்து கொள்ளமுடிகிறது . உம் நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து