இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பயப்படாதிருங்கள்! தேவனின் மகிமையான தூதர்களின் சமூகத்தில் எல்லா பயத்தையும் விலக்க முடியும்? பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்,சாத்தானின் சாபத்திலிருந்து எல்லா மக்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரவும் தேவனின் குமாரன் பூமிக்கு வந்திருக்கிறார் என்பதை அறியும் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது! தேவன் தனது மகத்தான கிருபையால் நம்மை அடைய எல்லா தடைகளையும் உடைத்துள்ளார் என்பதை அறியும்போது பயம் நம் இதயங்களை ஆட்கொள்ளக்கூடாது.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, எல்லா பயத்தையும் புறம்பே தள்ளும் பேரின்பத்தின் ஈவுக்காக உம்மை துதிக்கிறேன். அந்த பேரின்பத்தினால் என் இருதயத்தை நிரப்பி, என் மீதான உமது அன்பை நான் புரிந்துகொள்ள முயலும்போது என் மனதை ஆச்சரியத்தால் நிரப்பும். உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் கொடுக்கப்பட்ட உமது கிருபையை கேட்காதவர்கள், இன்னுமாய் ஏற்றுக்கொள்ளாதவர்களை அதிக அக்கறையுடன் கவனிக்க என்னை உற்சாகப்படுத்தும். அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து