இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிமியோனுக்கு தேவன் அருளின பரிசு உண்மையிலேயே விலையேறப்பெற்றது இன்னுமாய் அவனுடைய உள்ளத்தை தொடுகிறதாய் இருந்தது. இருப்பினும், தேவனுடைய இரட்சிப்பைத் தேடும் ஒவ்வொரு தேசத்தாரும் , இனத்தாரும் மற்றும் பலத்தரப்பட்ட கலாச்சாரத்தின் மக்களின் முழு வெளிப்பாடாக சிமியோனானவர் இருக்கிறார். தேவனின் இரட்சிப்பு எல்லா ஜனங்களுக்கும் உண்டானது என்று , லூக்கா ஆசிரியர் நமக்கு மீண்டும் மீண்டும் நினைப்பூட்ட விரும்புவது போல! இன்னும் சொல்லப்போனால் தேவனின் ஒளியானது அருணோதயம் ஆயிற்று . அந்த அருணோதயத்தை வாழ்த்துவோம், வணங்குவோம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

எல்லா இராஜ்ஜியங்களின் தேவனே , நம் பூமியில் சமாதானத்திற்காக நான் ஜெபம் செய்வது மட்டுமல்லாமல், வரும் ஆண்டில் இயேசுவைப் பற்றிய அறிவு ஒவ்வொரு தேசத்திற்கும் பரவ வேண்டும் என்று நான் விண்ணப்பம் செய்கிறேன். உமது கிருபைக்கு காத்திருக்கும், என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் என்னை மேலும் கவனமுள்ளவனாக மாற்றியருளும். உமது இரட்சிப்புக்கு அவர்களின் கண்களைத் திறக்க எனக்கு தைரியத்தையும் என் நாவிலே சரியான வார்த்தைகளையும் தாரும் . உமது நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்புபவர்களிடம் உதாரத்துவமுள்ளவனாக நடந்துகொள்ள என்னை உற்சாகப்படுத்தும் . சாத்தானின் கிரியைகளை கட்டும்படி பெலன் தாரும். இவ்வுலகத்தை இருளின் அந்தகாரத்தில் வைக்க விரும்பும் சாத்தானிடத்திலிருந்து பாதுகாத்தருளும். அவர்களின் இருளில் உமது இரட்சிப்பைக் கொண்டு வரும் கிருபையின் வழியை உருவாக்க என்னைப் பயன்படுத்தியருளும் . உலகம் முழுவதும் உமது கிருபையின் வெற்றியின் மூலமாக உம்முடைய ராஜ்யத்தின் வெற்றியை நிலை நாட்டுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து