இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநியாயமாய் பாடுபட்டு அந்த வார்த்தைகளின் சத்தம் கூட என் முதுகுத்தண்டில் ஒரு குளிர்ச்சியை அனுப்புகிறது. அத்தகைய விஷயம் நியாயமானதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ தெரியவில்லை - அது அநேகமாக இல்லை. ஆயினும்கூட, ஒரே மெய்யான தேவனுக்கும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் தங்களை ஒப்புவித்ததின் நிமித்தமாக மற்றும் விசுவாசத்தின் காரணமாக வேதனையும் மற்றும் அநியாயமாய் பாடுகளை சுமக்கும் பல சகோதர சகோதரிகளும் நம்மிடம் உள்ளனர். பயங்கரமான துன்புறுத்தல்கள் அல்லது கஷ்டங்களால் தீண்டப்படாதவர்கள் நம் ஆவிக்குரிய குடும்பத்தில் கஷ்டங்கள், பாடுகளையும் , துன்பங்கள் மற்றும் தவறாக நடத்தப்படுபவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்க ஆரம்பித்தால் அது நம்பமுடியாததாக இருக்கும் அல்லவா? தேவனை கனம்பண்ணுவதற்கு இப்படிப்பட்ட சிரமங்களை எதிர்கொண்டு கிறிஸ்துவின் கிருபையை அவர்கள் வெளிக்காட்டும்போது, ​​நம் பிதா அவர்களுக்குச் சகித்துக்கொள்ள பலத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்களை விரைவில் விடுவிக்கவும் ஜெபிப்போம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் இரக்கமுமுள்ள பிதாவே , இயேசுவின் கிருபையை வெளிப்படுத்தும் போது வேதனை மற்றும் கஷ்டங்களை அனுபவிக்கும் உம்முடைய பிள்ளைகளை இன்று ஆசீர்வதியும். இந்த பிரச்சனைகள் துன்புறுத்தல் காரணமாக இருந்தாலும் சரி அல்லது வாழ்க்கையின் கஷ்டங்கள் காரணமாக இருந்தாலும் சரி, துன்பப்படும் என் சகோதர சகோதரிகளை நீர் பெலப்படுத்த ஜெபிக்கிறேன் . ஆனால் பிதாவே , இந்த துன்பத்திற்கு ஒரே நிரந்தரமான பதில் இயேசுவின் இரண்டாம் வருகை என்று எனக்குத் தெரியும், எனவே தயவுசெய்து அவரை விரைவில் அனுப்புங்கள். வரும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து