இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தர் தம்முடைய அன்பான கிருபையினாலும், தம்முடைய ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும், ஜலப்பிரளயத்தின்போது இஸ்ரவேலரை அற்புதமாக யோர்தான் நதியின் வழியாக நடத்தி வந்தார். அவர் தன்னைப் பற்றி ஒரு முக்கியமான அறிக்கையை தனது மக்களிடம் வெளியிட்டார். அவர் எப்போதும் இஸ்ரவேல் தன்னை "மதிக்க" விரும்பினார். மேலும் , இஸ்ரேலின் எதிரிகள் பயத்துடன் நடுங்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் செய்தது. தேவன் தனக்கும் தம் மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக ஒரு மகாப் பெரிதான வெற்றியைப் பெற்றார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் மகத்துவமுமான தேவனே, நீர் நீதியை அணிந்து, மகிமையினால் அபிஷேகம் பண்ணப் பட்டிருக்கிறீர் . நான் எப்போதும் உமக்குரிய பயத்துடனும் பக்தியுடனும் நடக்க விரும்புகிறேன். உமக்கு கொடுக்கவேண்டிய அளவுக்கு நான் உம்மை பயபக்தியுடனும் கனத்துடனும் நடத்தாத நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். உம்முடைய நாமத்தை மற்றவர்கள் வீணாகப் பயன்படுத்தும்போது நான் அதை பரிசுத்தமாக வைத்திருக்காதபோது என்னை மன்னியுங்கள். அடியேனுடைய வாழ்க்கை, அன்பு மற்றும் என் எல்லாவற்றிற்கும் நீர் மாத்திரமே தகுதியானவர். இப்போதும் எப்பொழுதும் உமக்கு துதியையும் புகழ்ச்சியையும் கொண்டுவர விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து