இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் தங்களுடைய பட்சத்தில் இருப்பதாக எத்தனை பேர் கூறுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா . அடிமைத்தனத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறவர்கள் , தங்களுடைய சுயநலத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறவர்கள் , பொய் பேசுகிறவர்கள் , அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கிறவர்கள் , நல்லொழுக்கத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறவர்கள் , சக் பெலவீனர்கள் மீது அநீதியை திணிக்க விரும்புகிறவர்கள் , "இனச் சுத்திகரிப்பு" நடைமுறைப்படுத்த முயல்பவர்கள் கூட தேவன் "என் பட்சத்தில் இருக்கிறார் "என்று சொல்லுகின்றனர். ஆனால் தேவன் சோதனையை மிகவும் எளிமையாக்குகிறார்: நன்மையைச் செய்யுங்கள், நன்மையைத் தேடுங்கள், இல்லையெனில் நீங்கள் என்னுடையவர்கள் அல்ல ! ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் , நீதிமன்றத்திலும், சந்தையிலும், வழிபாட்டுத் ஸ்தலங்களிலும் எல்லா மக்களுக்கும் சம உரிமையைக் குறிக்கிறது. தேவன் நம் பட்சத்தில் இருக்கிறார் என்று நாம் கூறிக்கொண்டால், தேவன் வரையறுத்துள்ளபடி, நன்மை, நீதி மற்றும் க இரக்கம் ஆகியவற்றின் பக்கத்தில் இருந்து நாம் தேவனின் பக்கம் நெருங்குவது மிகவும் நல்லது!

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனே, கிருபை நிறைந்தவராய் , நீதியை மற்றும் நேர்மையை நேசிப்பவராய் , அநேகமுறை மறக்கப்பட்டவர்களுக்கான உம்முடைய அக்கறைக்காக நான் உம்மை போற்றுகிறேன். உமது பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தால், நான் தீமை மற்றும் ஒடுக்குமுறையின் பக்கம் இருக்கும்போது என்னைக் கண்டித்து உணர்த்தி , என்னை மற்றவர்களின் இரட்சிப்புக்காக , என் கலாச்சாரத்திற்காக மற்றும் எனது உலக மக்களுக்காக ஊழியம் செய்ய அனல்மூட்டி எழுப்பும் - நித்திய இரட்சிப்புக்காக மாத்திரமல்ல , தீமையிலிருந்தும் மற்றும் வெறுப்பிலிருந்தும் இரட்சிக்கும்படி என்னை எடுத்து பயன்படுத்தும் . உம்முடைய இருதயத்தில் உள்ளது போல உமது ராஜ்யம் எங்கள் உலகிலே இன்னும் அதிகமாய் பிரகாசமாக உதயமாகட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து