இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய செயல்கள் தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பதிலளிப்பதில்லை , ஆனால் மீட்பைக் கொண்டுவருவது lஅவரது ஆதி கால திட்டத்தின் ஒரு பகுதியாகும்.ஆம், அவர் அநேக அற்புத காரியங்களை செய்திருக்கிறார்: "அவரைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் " என்று மறுபடியும் மறுபடியும் கூக்குரலிட்ட ஒரு கூட்ட ஜனத்தின் தீய நோக்கத்தை அவர் எடுத்துக் கொண்டு, தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி நம்மை மீட்பதற்கான வாய்ப்பாக அவைகளை மாற்றினார். அவர் சத்தியத்தில் பரிபூரணமானவர், அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நீர் ஒவ்வொரு நாளும் புதிய அதிசயங்களினாலும் , விஷயங்களினாலும் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள். இன்னும் அவர்கள் உமக்கு புதியவர்கள் அல்ல என்று என் இருதயத்தின் ஆழத்திலே நான் அறிவேன். வாழ்க்கை சலிப்பூட்டும் அல்லது யூகிக்கக்கூடியதாக இல்லாததினால், உம்மீது அதிக தாகமுடையவனாய் வைத்தமைக்காக உமக்கு நன்றி, அதினால் என்றென்றும் நீர் புதியவராய் , மாசில்லாதவராய் உற்சாகமுள்ளவராய், அற்புதராய் இருப்பதற்காக உமக்கு நன்றி.என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து