இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த உலகமும், காலமும் உண்டாவதற்கு முன்னமே ! இவைகள் எப்போது என்று எப்படி உங்களால் உணர்ந்து கொள்ளமுடியும் . நாம் அறிந்துகொள்ள தொடங்குவதற்கு முன்னதாகவே தேவன் நம்மைப் பற்றி ஆதிகாலம் முதலே நினைத்திருக்கிறார் ! அவர் நம்மை குறித்து நினைப்பதற்கு காரணம், அவருடைய கிருபையை நமக்கு அருளவும், வெளிப்படுத்துவதும் மற்றவர்களைத் தன் பக்கம் அழைப்பதும்தான். இயேசு எப்பொழுதும் தேவனின் தீர்மானமாய் இருந்தார், நாம் அனைவரும் அவருடைய இலக்காக இருந்தோம். அவருடைய பரிசுத்த வாழ்க்கையை நாம் வாழ்வதன் மூலம் நம்முடைய பதிலளிப்பை உறுதி செய்வோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , உலகம் தோன்றுவதற்கு முன்பே என்னை அறிந்ததற்க்காக , என் தேவைகளைப் பற்றி சிந்தித்ததற்காகவும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி . உம் நீதியையும், கிருபையையும் பிரதிபலிக்கும் வாழ்க்கையை வாழ முயற்சிக்கையில், இந்த நாளையும் , வரும் நாட்களையும் , உம்மை மகிமைப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கிறேன். பாவமற்றவராகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து