இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இது எவ்வளவு நேர்த்தியான ஜெபமாகும் ! மிகவும் தன்னம்பிக்கை கொண்ட உலகில், நாம் கொண்டிருக்கும் நன்மையான மற்றும் தீமையான காரியங்கள் எவ்வளவு வல்லமை வாய்ந்த தாக்கத்தை உண்டுபண்ணுகிறது என்பதை நினைவுபடுத்துவது நம்மை உயிர்ப்பிக்கிறதல்லவா ? நமது மாயத்தினாலும்,துரோகத்தினாலும் அழிவுகரமான தாக்கத்தை நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல், நமது தோல்விகள் ராஜ்யத்தின் வளர்ச்சிக்கும் அல்லது கிறிஸ்துவில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கும் அழிவுகரமானதாக இருக்கக்கூடாது என்று ஜெபம் செய்வோம், அவர்கள் தேவனுக்கு ஊழியஞ் செய்யவும், கனத்தை செலுத்தவும் முயற்சிப்போம் !

என்னுடைய ஜெபம்

கிருபையும்,மகத்துவமுமுள்ள தேவனே , நான் பாவம் செய்ய விரும்பவில்லை. இது உம்மை எதிர்த்து நிற்பதும் இன்னுமாய் அது உம்முடைய இருதயத்தை பிளக்கிறதுமாயிருக்கிறது என்று எனக்கு நன்றாய் தெரியும் . நான் பாவம் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் அது என்னை மங்கி போகச்செய்கிறது மற்றும் எதிர்காலத்தில் சாத்தானின் தாக்குதல்களுக்கு என்னை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது என்பதை நான் அறிவேன். தேவனே,நான் பாவம் செய்யவும், என்னிமித்தம் நீர் வெட்கப்பட்டுப் போகவும் விரும்பவில்லை. மேலும் பிதாவே , நான் பாவம் செய்ய விரும்பவில்லை,ஏனெனில் உம்மைத் தேடுபவர்கள் இடறலடைய நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. என் பாவங்களை மன்னியுங்கள். தயவு செய்து, அன்பான பிதாவே , என் சோதனையின் நேரத்தில் தடுமாறாமல் என்னைப் பலப்படுத்தியருளும் . சோதனையையும் பாவத்தையும் வென்றவரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து