இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுக்கு முன்பாக நமக்காகப் பரிந்து பேசுவதற்கு, எவ்வளவு வல்லமை படைத்தவராகவோ, பக்திமிக்கவராகவோ அல்லது சிறப்பு வாய்ந்தவராகவோ இருக்கும் , இன்னொரு மனுஷனை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தேவனே தனக்கும் நமக்கும் இடையே சரியான மத்தியஸ்தரை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து, அவருடைய பிள்ளைகளாகிய நாம் சுதந்திரமாக செல்லலாம். அந்த மத்தியஸ்தர் மட்டுமே, சபையின் தலையாகவும் , நம் சார்பாக தேவனுக்கு முன்பாக பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார். அவருடைய நாமம் கிறிஸ்து இயேசு, அவர் நம்முடைய கர்த்தரும், இரட்சகரும், சகோதரருமாவார்.

என்னுடைய ஜெபம்

தேவனே , நீரே என் தேவன் , உம்மை எளிதாக கிட்டி சேருவதற்கு என்னை அனுமதித்ததற்காக நான் துதிக்கிறேன் . என் சொந்த பெலத்தினால் காரியங்களை நடப்பிக்க விட்டுவிடாமல் , உம்மை கிட்டி சேர பெலனோ, நீதியோ என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன். ஆயினும், உமது கிருபையால், என் பாவத்திற்கு மீட்பை வழங்கியது மட்டுமன்றி, நான் உம்மை கிட்டி சேருவதற்கு ஒரு மத்தியஸ்தரையும் உண்டு பண்ணினீர்கள் . இயேசுவே, என் பாவத்திற்கான விலையை கொடுத்து , இன்றளவும் எனக்காகப் பரிந்து பேசுவதற்காக , பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தமைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்! இயேசுவே, உமது நாமத்தினால் நான் ஜெபிக்கும்போது இந்த விண்ணப்பத்தை பிதாவுக்குத் தெரியப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து