இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

புத்திமதிகள் நமக்கு மட்டுமல்ல, நம் செயல்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் மிகவும் அவசியம். எனவே, நம் தனிப்பட்ட முடிவுகளால் மற்றவர்கள் மீது ஏற்படும் தாக்கத்தை நாம் அடிக்கடி குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாகவும், மீட்பின் செல்வாக்காகவும் இருக்க தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒரு செல்வாக்கு வட்டத்தில் வைத்துள்ளார். முட்டாள்தனமானதைத் தேர்ந்தெடுப்பதும், தேவனுக்கேற்ற திருத்தத்தை புறக்கணிப்பதும் நமது எதிர்காலத்தை மட்டுமல்ல, நாம் செல்வாக்கு செலுத்தும் மற்றவர்களின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது, இன்னுமாய் இயேசுவை காண்பிக்க ஏங்குவதிலும் பாதிப்பை உண்டுபண்ணுகிறது .

என்னுடைய ஜெபம்

பிதாவே, என்னைத் தாழ்த்தி, சாந்தமாய் தண்டியும் , ஆனால் எனக்குத் தேவையான புத்திமதிகளை தாரும் . என் ஆளுமையிலும் குணத்திலும் பலவீனமான பகுதிகள் உள்ளன, அவை என் ஆவிக்குரிய இலக்குகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதை நான் அறிவேன். உமது பரிசுத்த ஆவியால் என்னைப் பக்குவப்படுத்தி, உமது சத்தியத்தால் என்னைத் திருத்துங்கள். உமது நித்திய வழியில் என்னை வழிநடத்த என் ஆவிக்குரிய நண்பர்கள், உமது மேய்ப்பர்கள் மற்றும் பரிசுத்த புத்திமதிகளை கொண்டு நடத்துங்கள் . நீர் என்னைச் சுற்றி வைத்தவர்களுக்கு என் செல்வாக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இன்னும் இயேசுவை போல மாற, என்னை வனைந்து , சுத்திகரித்து, மாற்றும்படி பரிசுத்த ஆவியானவரின் ஓத்தாசையை கேட்கிறேன் .* இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென். * விசுவாசிகளாகிய நமது குறிக்கோள், கிருபையினால் இயேசுவைப் போலவே மக்களாக மறுவடிவமைக்கப்பட வேண்டும் - லூக்கா 6:40; 2 கொரிந்தியர் 3:18; கலாத்தியர் 4:19; கொலோசெயர் 1:28-29.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து