இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் ஆவிக்குரிய முன்னோடிகளின் வாழ்க்கையை ஆசீர்வதிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர்களுக்காக தினமும் ஜெபம் செய்கிறீர்களா? அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை தினந்தோறும் அனுப்புகிறீர்களா? அவர்களின் அன்பான மற்றும் கனிவான கவனத்திற்காக நீங்கள் நன்றி கூறுகிறீர்களா? அவர்களின் திருத்தங்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா மற்றும் அவர்களின் உறுதிமொழிகளில் இருதயம் செலுத்துகிறீர்களா? உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபிரேயர் 13:17). நம்மிடையே உழைக்கும் ஆவிக்குரிய நடத்துனர்களுக்கு எப்பொழுதும் மதிப்பளிப்போம் !

என்னுடைய ஜெபம்

எங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆவிக்குரிய தலைவர்களுக்காக நன்றி, சர்வவல்லமையுள்ள தேவனே , இஸ்ரேலின் இராஜாவே . அவர்களின் குடும்பங்களுக்கு உண்மையுடனும், அவர்களின் வாழ்க்கை ஆரோக்கியத்துடனும், அவர்களின் செல்வாக்கு ஆவிக்குரிய தாக்கத்துடனும், மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை விருப்பமுள்ள பின்பற்றுபவர்களுடனும் ஆசீர்வதிக்கவும். அன்புள்ள தேவனே , உமது மக்களின் ஒற்றுமையாலும், எங்கள் தலைவர்களின் தரத்தாலும் நீங்கள் போற்றப்படவும், மகிமைப்படுத்தவும் வேண்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து