இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கி.பி 20 ஆம் நூற்றாண்டில் நாசரேத்தில் இயேசுவானவர் வாழ்ந்த வீட்டின் முகவரியை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் அந்த வீட்டிற்குச் சென்று, " தேவன் இங்கே வாசமாயிருக்கிறார் !" என்று சொல்லியிருப்போம். இயேசுவானவர் தேவனுடைய முழுமையாயும் மற்றும் மாம்சத்திலே முழு மனுஷனாகவும் வெளிப்பட்டார் என்ற சத்தியத்தை-அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், (பிலி. 2: 5-7) - இவைகளை முழுமையாக புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினம் , இது கிருபையின் அற்புதமான சத்தியமாகும் . நாம் அவரைப் போல் இருக்க முடியாது என்பதால் தேவ குமாரன் நம்மைப் போல இருக்கம்படியாய் அடிமையின் ரூபமாக இருக்கத் தேர்ந்தெடுத்தார். நாம் அவரிடம் ஏற முடியாததால் தேவனுடைய குமாரன் நம்மிடம் இறங்கினார். இயேசுவிவின் மூலமாய் தேவன் தம்மை முழுமையாக நம்மிடம் வெளிப்படுத்தினார் , அதினால் நாம் அவருக்குள் நிறைவாக இருக்க முடியும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , என்னால் ஆராய்ந்து முடியாத முடியாத அளவுக்கு நீர் மிக பெரியவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆயினும், நீர் எப்பொழுதும் போலவே அற்புதமும், வல்லமைமையும், மாட்சிமையும் , உடையவர் என்பதால் என் மனதால் புரிந்து கொள்ள முடியாததை விட நீர் பெரியவர் . தேவனே , உமது கிருபை என்னை வியக்க வைக்கிறது. நான் உம்மை அறிந்து கொள்ள இயேசுவை நீர் அனுப்பியதற்காக உமக்கு நன்றி. நான் மன்னிக்கப்படுவதற்கு இயேசு வானவரை இவ்உலகிற்கு அனுப்பியதற்காக நன்றி. இயேசுவை மறுபடியுமாய் அனுப்பினதினால் , நான் நித்திய வீட்டிற்குச் சென்று என்றென்றும் வாழ முடியும். உமக்கு நன்றி இயேசுவே, என்னை மீட்க வந்ததற்கும், பின்னர் மறுபடியுமாய் பிதாவினிடம் அழைத்து செல்வதற்கும் , அதனால் நான் உம் மூலம் அவருடன் சம்பாஷிக்க முடியும். உம்முடைய நாமத்தினாலும், உமது கிருபையின் நிமித்தமும், நான் எங்கள் பிதாவுக்கு முன்பாக தைரியமாக ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து