இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கடைசி நாட்களில் வாழ்கின்ற , ஒவ்வொரு விசுவாசியும் - வாலிபர்களும், வயது முதிர்ந்தவர்களும் , சகோதரரும், சகோதரிகளும் - இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் நமக்கு அருளப்பட்ட தேவனுடைய கிருபையை நம்முடைய தனிப்பட்ட சாட்சியாக சொல்ல ஆவியானவரால் நடத்தப்படவும் மற்றும் ஆவியின் அதிகாரத்தையும் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இயேசு தம்முடைய மரணத்திற்கு முன்பாக நமக்காக ஜெபித்தபடி (யோவான் 17:20-23), இந்த உலகம் அவர் தமது குமாரனாகிய இயேசுவை, நம் அனைவருக்கும் இரட்சகராக அனுப்பினார்! என்ற மெய்யான சத்தியத்தை உலகத்தில் உள்ள எல்லோரும் அறிய வேண்டுமானால், நாம் நம்முடைய பாலினத்தினால் உண்டாகும் தடைகள், வயதினால் உண்டாகும் தடைகள் மற்றும் இனத்தினால் உண்டாகும் தடைகள் யாவற்றையும் கடந்து தேவனுடைய பிள்ளைகளாக நாம் யாவரும் ஒருமித்திருக்க வேண்டும் (கலாத்தியர் 3:26-29).

என்னுடைய ஜெபம்

எல்லா தேசத்துக்கும் தேவனானவரே , உமக்கும் எங்களுக்கும் பிரிவினை உண்டாக்கும் தடைகளை தகர்த்தெறிய பெலன் தாரும் . உமது கிருபையின் அழகிய செய்தியை எங்கள் பிரிவினை மழுங்கடிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயேசுவானவர் எங்களுக்கு உதவினார். தயவு செய்து உமது பரிசுத்த ஆவியை எங்கள் மீது ஊற்றி, எங்களின் தவறான எண்ணம் மற்றும் சுயநலம் குறித்து உணர்த்தி எங்களைத் சிட்சித்தருளும் . எங்களுடைய ஒற்றுமையில் காண்பிக்கப்படும் உம் மறுரூபமாக்கும் அன்பைக் கொண்டு எங்களை மாற்றியருளும் . உம்முடைய ஒன்றுபட்ட மக்கள் இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் இவ்வுலக மக்களுக்கு பிரகடனப்படுத்துவதற்கு, எங்களுடைய சுயநலம் மற்றும் குறுகிய மனப்பான்மை ஆகிய இவைகள் தடையாய் இருப்பதற்காக எங்களையும் மன்னியுங்கள், குறிப்பாக அடியேனை மன்னியுங்கள். இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து