இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய பொக்கிஷமும், சத்தியமும் வேதத்திலிருந்து வந்தவை. சாத்தான் கொண்டு வரும் மரணத்துக்கேதுவான கண்ணிகளை எப்படி தவிர்ப்பது மற்றும் தேவனின் ஆசீர்வாதமுள்ள வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதற்கான தேவனுடைய வழிகாட்டுதலே அவருடைய வார்த்தைகளடங்கிய பரிசுத்த வேதாகமமாகும் . தேவனுடைய வார்த்தை நம்மை கட்டுப்படுத்துகிறது என்று எண்ணாமல் , அதை அன்பின் ஈவாக பார்க்க வேண்டும் மற்றும் இவ் உலகத்தில் உள்ள எல்லா செல்வத்தையும் விட மிகவும் விலையேறபெற்றது என்று எண்ண வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , உமது எழுதப்பட்ட வார்த்தைக்கும், உம்முடைய ஜனங்களுக்கென்று கொடுக்கப்பட்ட வேத வார்த்தைக்காகவும் உமக்கு நன்றி. உம்முடைய சத்தியம் என் இதயத்திலும், மனதிலும் ஜீவ ஊற்றைப்போல இருக்கிறது அது போல என் அனுதின வாழ்க்கையின் கிரியையிலும் உயிர்பெறட்டும். உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து